உயிருக்கு போராடிய நிலையில் பொலிஸ் அதிகாரியால் காப்பாற்றப்பட்ட பெண்!!

704

கதிர்காமத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோத ம துபான விற்பனையை தடுக்க சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரியினால் பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பிற்கு சென்ற இடத்தில் பாம்பு தீண்டிய நிலையில் உயிருக்கு போராடிய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய சோதனையிட பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது சிறியளவிலான மதுபான போத்தல்களே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பெரிய மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. எனினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணின் சத்தம் கேட்டு வைத்தியசாலையில் அனுதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டத்தினால் நாளை (திங்கட்கிழமை) குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த பெண்ணை தீண்டியது நாக பாம்பு என தெரிய வந்தமையினால் கடமையை ஒதுக்கி வைத்த பொலிஸ் அதிகாரி அந்த பெண்ணை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.