கொழும்பில் தெருவோரங்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள் : உதவி செய்ய யார் முன்வருவார்?

599

தெருவோரங்களில்..

நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மாவட்டத்தில் சிக்கியுள்ள மலையக இளைஞர்கள் பலர் வீடு திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 40 மலையக இளைஞர்கள் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளனர்.

அவர்களுக்கு தங்குமிடம், உணவு உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமையினால் தெருவோரங்களில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். பொது மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரை இருந்தால் மட்டுமே பெறுப்பேற்க முடியும் என இராணுவத்தினரும் தெரிவித்துள்ளனர்.

எந்தவித தரப்பினரும் தமக்கு உதவி செய்யாத நிலையில் கொழும்பிலுள்ள மத ஸ்தலங்கள் தங்க தமக்கு அனுமதி கிடைக்குமா என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் தம்மை சொந்த ஊரிலாவது சுயதனிமைக்கு உட்படுத்தி விடுவிக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.