புத்தளத்தில்..

புத்தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய தந்தையினால் அவரது மூன்று பிள்ளைகளுக்கு பரவியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய தந்தைக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அவருக்கு 11, 9 மற்றும் 5 வயதுடைய 3 பிள்ளைகள் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்தே இந்த பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு்ளனர். 84 பேர் உள்ள அந்த முகாமில் 35 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
-தமிழ்வின்-




