அரசாங்கம் என்னை பொறுப்பேற்க வேண்டும் : சொகுசுக் கப்பலில் பணியாற்றும் இலங்கையர் கோரிக்கை!!

420

கப்பலில் பணிபுரியும் இளைஞர்..

சுற்றுலாக் கப்பலில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தன்னை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனுர பண்டார என்ற இளைஞரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

MSC Magnifica என்ற குறித்த கப்பல் நாளை இலங்கை நோக்கி வரவுள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்த கப்பலில் 2300 பயணிகள் இருந்தனர். கடந்த ஜனவரி 5ம் திகதி கப்பல் தனது பயணத்தினை ஆரம்பித்தது. எனினும், கொரோனா அச்சம் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை நிறுத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில், குறித்த கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. இதன்போது, தன்னை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

அவ்வாறு மீட்காவிட்டால் மீண்டும் ஐரோப்பாவிற்கு செல்ல நேரிடும். தான் இலங்கைக்கு வர விரும்புவதாகவும், இரண்டு மாதங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.