28 சுற்றுலா விடுதிகள் சேதம்

களுத்துறையில் கடலில் உருவான பாரிய அலை காரணமாக சுமார் 28 சுற்றுலா விருந்தகங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த வருடத்துக்குள் இந்த சம்பவம் இரண்டாவது முறையாக ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் அலையினால் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.




