கொழும்பில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீரென உயிரிழப்பு!!

617

வீடு திரும்பிய இளைஞன்..

கொழும்பில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி வீட்டுக்கு சென்ற 30 வயதான இளைஞர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

எம்லிப்பிட்டிய மித்தெனிய காரியமடித்த, தலாவ வைத்தியசாலையில் இந்த நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

காரியமடித்த குடாகொட, உடகஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த விக்ரமராச்சி கங்கானம்கே வஜிர பிரசங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் கொழும்பில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணாக கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், இளைஞனுக்கு நேற்றிரவு 10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது. இறந்த இளைஞன் கொழும்பில் இருந்து வந்துள்ளதால், அது குறித்து கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.