நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் 15 மில்லியன் கோழி முட்டைகள்!!

1020

கோழி முட்டைகள்..

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கோழி முட்டை விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சுமார் 15 மில்லியன் முட்டைகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாளாந்தம் உற்பத்தியாகும் முட்டைகளில் நூற்றுக்கு 10 வீதம் மாத்திரமே விற்பனையாகுவதாக திணைக்கள இயக்குனர் சுனில் சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேமிக்கப்பட்ட முட்டைகளில் 11 மில்லியன் கோழி முட்டைகள் வட மேல் மாகாண உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.