இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் : 7ஆவது நபர் மரணம்!!

589

7ஆவது நபர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு நோய் தொற்று வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நபர் சற்று முன்னர் 48 வயதான நபர் உயிரிழந்துள்ளாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிகை ஏழாக அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.