சவுந்தரராஜா சயனந்தன்..
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலை மதில் இடிந்து விழுந்துள்ளது.
இதன் போது இளைஞன் ஒருவர் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது ஏறி வெளியேற முற்பட்டபோது மதில் உடைந்து வீழ்ந்துள்ளது. ஊரடங்கு சட்டம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் குறித்த இளைஞர் நீண்ட நேரமாக இரத்தம் வெளியேறியதாலேயே உயிரிழந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேரத்தின் பின்னரேயே அவர் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் புளியங்குளம்,ஓட்சுட்டான் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜா சயனந்தன் (வயது 23) என்று தெரிவிக்கப்படுகிறது.