வவுனியாவில் வீட்டுத்திட்டத்தை அவதானித்த இந்தியக் குழுவினர்!!(படங்கள்)

274

இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த குழுவினர் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளை வவுனியாவில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையில் அந்த குழு யாழிற்கு விஜயம் செய்திருந்தது.
குறித்த குழுவினர் வவுனியா புதுக்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டங்களை கண்காணித்துள்ளனர்.

வவுனியா புதுக்குளம் கிராமசேவகர் பிரிவில் இந்திய வீட்டுத் திட்டத்தை பெற்ற பயனாளிகளை சாஸ்திரி கூழாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவின் வழித்துணையுடன் வருகை தந்திருந்த இந்த குழுவினரில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், வெளிவிவாகார அமைச்சின் மேலதிக செயலாளர் பினய் குமார், வெளிவிவகார அமைச்சின் நிதி இயக்குநர் அனுராக் சிறிவஸ்ராவா, வெளிவிவாகார அமைச்சின் கீழ் நிலைச் செயலாளர் ஜோன் மாய் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

1 2