மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்படும் தாமரைக் கோபுரம்!!

534

தாமரைக் கோபுரம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று மாலை 6.45 மணியளவில் மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட உள்ளது.

உலக தொற்று நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸில் இருந்து இலங்கையை மீட்பதற்காக பாடுப்படும் சுகாதாரத்துறையினர், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில்

தாமரை கோபுரம் மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட உள்ளது என தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட தொனிப் பொருளின் கீழ் இந்த மின் வெளிச்ச அலங்காரம் செய்யப்பட உள்ளது.