முகநூல் ஊடாக போலி செய்தி வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

636

முகநூல் ஊடாக..

முகநூல் ஊடாக கொரோனா வைரஸ் சம்பந்தமாக போலியான செய்தியை வெளியிட்ட நபர் ஒருவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட மாட்டார்கள் என இந்த நபர் முகநூல் ஊடாக பிரசாரப்படுத்தியுள்ளார். இப்படியான பொய் பிரசாரங்களை அனுமதிக்க முடியாது எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானங்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.