இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது அரசாங்கம்!!

1109

பாடசாலைகள்..

இலங்கையின் அனைத்து அரச பாடசாலைகளும் 2ம் தவணைக்காக மே மாதம் 11ம் திகதி ஆரம்பமாகுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் நாட்டின் நிலைமை அவதானிக்கப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திகதி குறிப்பிடாமல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.