பொலிஸார் விடுக்கும் கடும் எச்சரிக்கை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

387

ஊரடங்கு சட்டம்..

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாஸ் அனுமதியினை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனிப்பட்ட நோக்கங்களுக்காக தங்களது உத்தியோகபூர்வ ஊரடங்கு அனுமதி அடையாள அட்டையை பலர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 43 பிரிவின் கீழ் செயற்படுபவர்களுக்கு மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.