விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகள் : விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பிணை!!

609

உயிரிழந்த சகோதரிகள்..

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் சடலம் கட்டையடம்பன் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபரை மன்னார் பதில் நீதவானினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து அக்கிராம மக்களும், குடும்ப எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மன்னார் நீதி மன்றத்தில் நேற்று பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மத குரு ஒருவரும், சட்டத்தரணி ஒருவரும் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும், பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிராந்திய பொலிஸ் மற்றும் பொறுப்பதிகாரி ஆகியோர் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊடகங்களே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.