முல்லைத்தீவில்..

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சிறுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைக்காக உழவு இயந்திரம் ஒன்றை இன்று காலை வீட்டில் இருந்து பிரதான வீதிக்கு செலுத்தியுள்ளார்.

இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.




