லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய இரு இலங்கையர்கள்!!

542

லண்டன் விமான நிலையத்தில்..

லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் சிக்கியிருந்த இலங்கை பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 12.45 மணியளவில் லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 என்ற விமானத்தில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள 18 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 15 பேரை எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.