நீக்கப்பட்ட வரிகளை..

கடந்த ஜனவரி மாதம் இரத்து செய்யப்பட்ட சில வரிகளை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிற்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்ட கொடுப்பனவு வரியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் உயர் தனி நபர் வரியாக புதிய முறையில் கீழ் அறிமுகம் செய்துள்ளதாக உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது ஊழியரின் அனுமதியின் கீழ் முதலாளியால் கழிக்கப்பட வேண்டும்.

குறைந்த பட்சம் மாத வருமானம் இரண்டு லட்சம் அல்லது வருடாந்த வருமானம் குறைந்த பட்சம் 30 இலட்சம் பெறும் ஊழியர்கள் அதற்குட்படுகின்றனர்.




