யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

432

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணம் – பலாலி தனிமை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

இன்று 23 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 2,024,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 128,972 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில், கொரோனா தொற்றினால் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.