100 பேர் கொழும்பில் கைது..

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நபருடன் நெருங்கி பழகிய நபர்களை தேடி கடற்படையினர் புறக்கோட்டை குணசிங்கபுர, டாம் வீதி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் இன்று தேடுதல் நடத்தியுள்ளனர்.

இந்த தேடுதலில் கொரோனா வைரஸ் தொற்றிய நபருடன் நெருங்கி பழகிய சுமார் 100 பேரை தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினட் கமாண்டார் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கடற்படையின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நபர்கள் சம்பூரில் உள்ள கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-தமிழ்வின்-




