இலங்கையில் விரைவாக குணமடையும் கொரோனா நோயாளிகள் : 28 ஆயிரம் பேர் இதுவரை கைது!!

476

கொரோனா நோயாளிகள்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமாகி நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோன வைரஸ் தொற்றுடன் இதுவரை 238 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது 163 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 7 பேர் ஏற்கனவே இந்த தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோன வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு மேலும் 1522பேர் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டனர். இதன்போது 306 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை 28 ஆயிரத்து 159பேர் கைது செய்யப்பட்டனர். 7105 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு இலங்கையின் 6 கடற்றொழிலாளர்கள் சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சீசெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சம்பத் K-V 0911 கே.எல்.ஆர் என்ற அடையாளத்தைக் கொண்ட படகில் சென்றிருந்த நிலையிலேயே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்துக்குள் இலங்கையின் சட்டவிரோத படகு சீசெல்ஸில் கைப்பற்றப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.