இலங்கையில் முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளை கண்கானிக்கும் ட்ரோன் கமரா!!

885

ட்ரோன் கமரா

இலங்கையில் முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளை ட்ரோன் கமரா கண்கானிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளை கண்கானிப்பதற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இராணுவம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இராணுவ பிரிவில் ட்ரோன் ரெஜிமென்ட் ஒன்று ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.