இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் முழுமையாக நீங்கவில்லை : இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!!

761

கொரோனா தொற்று..

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் முழுமையான அளவில் நீங்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டது போன்று கொரோனா வைரஸ் தொற்று முழு அளவில் நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை வரையறுத்துள்ளதாகவும், அடையாளம் காணப்பட்டவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கை முன்னெடுக்கப்பட்டாலும் வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-