மின்னல் தாக்கத்தினால் சிறுமி உயிரிழப்பு!!

482

மின்னல்..

பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஊவா மாளிகா கிராமத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றின் கீழ் மழைக்காக ஒதுங்கி நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த, இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மோகன்ராஜ் ருக்‌ஷி என்ற 10 வயது சிறுமியே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.