அலுவலக புகையிரத சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்!!

463

புகையிரத சேவைகள்..

கொரோனா முடக்க நிலையை நீக்கும் வகையில் அலுவலக தொடரூந்து சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சேவைகளின் அரச மற்றும் தனியார் துறையினர் மட்டும் இந்த சேவைகளை பயன்படுத்த முடியும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த 18 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அலுவலக தொடரூந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.