மீண்டும் திறக்கப்பட்ட ம துபானக் கடைகள் : அறிவிப்பை திரும்பப்பெறுமாறு கோரிக்கை!!

623

ம துபானக் கடைகள்..

நாட்டை நேசிக்கும் அனைவரும் ம துபான சாலைகளை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் அறிவிப்பை கேட்டு திகைத்துப்போயுள்ளதாக ம துசாரம் மற்றும் போ தை தகவல் நிலையமான எடிக் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ம துபானகங்களை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் அறிவிப்புக்கு எ திராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடிக் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விஞ்ஞான ரீதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம் தற்போது அதனை கைவிட்டு ம துபானகங்களை திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எடிக் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் வழிகாட்டலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ம துபான அகங்களை திறக்கும்போது அதனை அருந்துவோர் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க ஏதுக்கள் உள்ளன.

ம துபானகங்கள் திறக்கப்பட்டால் விபத்துக்கள் அதிகரிக்கும். இது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினருக்கு மேலதிக பாரத்தை கொடுக்கும்.

வீடுகளில் வ ன்முறைகள் ஏற்பட்டு அதுவும் சுகாதாரத்துறையினருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் ம துபான அகங்களை திறக்கும்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதற்கு வழியேற்படும் என்று எடிக் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.