முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து : மூவர் படுகாயம்!!

501

மூவர் படுகாயம்..

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வெவசிறிகம பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து விபத்தில் காமடைந்தோர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்காப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(20.04.2020) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வென்ராசன்புர மற்றும் வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 23, 21, மற்றும் 25 வயதுடைய மூவரே படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.