வவுனியாவில் சர்வோதயத்தின் தேசோதய ஒன்று கூடல்!!(படங்கள்)

331

கிராமமட்டமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கோடு சர்வேதய தேசோதயப்பிரிவு உவாக்கப்பட்டது. இப்பிரிவின் வருடாந்த தேசோதய ஒன்றுகூடல் நிகழ்வு கடந்தவாரம் வவுனியா மாவட்ட சர்வோதய நிலையத்தில் இணைப்பாளர் எ.ஸ் உதயகுமாரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சர்வோதய தேசோதய தலைவர் திரு.இரா.சுப்பிரணியம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிராமமட்ட மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக கிராமியப் பொருளாதாரம், கிராமிய அபிவிருத்தி, ஆன்மீகம், மெய்யறிவு ஆகிய தலைப்புக்களில் வவுனியாவின் முதற்தர வளவாளர்களின் வளப்பகிர்வுடன் கிராமட்ட மக்களை மையப்படுத்தி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேசசெயலாளர் க.உதயராசா, வைத்தியர்கள் மற்றும் கலாநிதி திரு. புஸ்பகாந்தன், வடமாகாண சர்வோதய இணைப்பாளர் திரு ஜீவராஜ், சர்வோதய வடமாகாண ஆலோசகர் திரு.சுப்பிரமணியம், ஆசிரியர் திரு.மகாலிங்கம் மற்றும் வவுனியா மாவட்ட சர்வோதய இணைப்பாளர் திரு எஸ்.உதயகுமாரன், வவுனியா சர்வோதய பணியாளர்கள் உட்பட வவுனியா அரச திணைக்களம்சார்ந்த உழியர்களும் கலந்துகொண்டனர்.

அதேவேளை சர்வோதய தேசோதய கிராமமட்ட சிரமதான சங்கங்களின் அங்கத்தவர்கள் கிராமமட்ட மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

1 2 3 4