புதிதாக பரவும் ஆபத்து..

கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் சூழ்நிலையில், டெங்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாதம் இறுதியில் இருந்து அடுத்த மூன்று மாத காலத்திற்குள் டெங்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மாத்திரம் 200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தும் அதேவேளையில் டெங்கு நோய் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

வைரஸ் நோய்களுக்கு போன்று டெங்கு நோயை முற்றாக குணப்படுத்துவதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் நோய் அறிகுறிகள் ஏற்பட்ட பின்னர், அதனை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் சிகிச்சைகளையே மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெங்கு நோய் நுளம்புகளால் பரவுகிறது.




