விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் மூன்று நாட்களின் பின்னர் உயிரிழப்பு!!

642

படுகாயமடைந்த இளைஞர்..

மட்டக்களப்பு – தாண்டவன்வெளி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளார். தாண்டவன்வெளி சந்தியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினை சேர்ந்த எஸ்.மதுசன் எனும் (25 வயது) இளைஞர் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் ம துபான போத்தல்களை கொண்டு சென்ற நிலையில் விபத்தினை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.