கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு!!

504

கொரோனா..

இலங்கையில் இன்று மேலும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 அதிகரித்துள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 48 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.