கொரோனா..

கொரோனா நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்புகளை பேணாத நபர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை கிரமமாக உயர்வடைந்து செல்வதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களின் மூலம் நோய் பரவுகை சமூகத்தில் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று பரவுகையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்பொழுது கொரோனா நோய் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணாதவர்களுக்கும் நோய்த் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டில் அதிகளவில் சமூகத்தில் நோய்த் தொற்று பரவினால் பாரதூரமான ஓர் அனர்த்த நிலையை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-தமிழ்வின்-




