இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்!!

485

கொரோனா..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதுடன், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் இருந்து வருகின்றது.

இலங்கையிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில், 420 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 49 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில்,நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 11 பேர் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், 30 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், 5 பேர் வெலிசர முகாமில் இருந்து விடுமுறை பெற்று சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் இரத்தினபுரி, குருநாகல்-பொல்கஹாவெல, குருநாகல்-கீனியாபொல, பதுளை-கிராதுருகோட்டை, கண்டி, தம்புள்ளை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.