3 நாட்களில் 100 நோயாளிகள்..

இலங்கையில் இதுவரையில் 420 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா நோயாளர்க்ள அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இறுதியாக மூன்றே நாட்களில் 100 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் முதல் 100 நோயாளிகள் அடையாளம் காணுவதற்கு 58 நாட்கள் எடுத்துள்ளன.

அடுத்த 100 நோயாளிகளை அடையாளம் காணுவதற்கு 19 நாட்களாகியது. அடுத்த 100 நோயாளிகளை அடையாளம் காணுவதற்கு 8 நாட்களாயது. இந்நிலையில் இறுதி 100 நோயாளிகள் வெறும் மூன்று நாட்களில் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் கொரோனாவின் வீச்சு தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை 420 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 116 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.




