லண்டனில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல தமிழ் மருத்துவர் விஷ்னா!!

623

தமிழ் மருத்துவர் விஷ்னா..

பிரித்தானியா பெர்மிங்ஹாம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான பிரபல ஆலோசகராக பணிபுரிந்து வந்த, விஷ்னா இராசையா கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். விஷ் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் விஷ்னாவுக்கு 48 வயது. விஷ்னா ஒரு மலேசியத் தமிழர் ஆவார்.

குழந்தைகளுக்கான சிறந்த வைத்திய நிபுணர் என்பதோடு பெர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையில் பணிபுரிந்தார், அவர் பிராந்திய குழந்தை வலையமைப்பிற்கான முன்னணி மருத்துவர்ரும் ஆவார்.

அறக்கட்டளை அவரை ஒரு அற்புதமான மருத்துவர் என்று விவரித்து, அவர் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பராமரிப்பதில் ஆர்வமாக இருந்தார்.

குறைப்பிரசவ குழந்தைகளை கவனித்து அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற இவரின் இழப்பிற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

எனது அப்பாவை இழந்து நாங்கள் தனிமை ஆகிவிட்டோம் என விஷ்னாவின் மகள் கெட்லி தெரிவித்துள்ளார். மேலும் அவரது மனைவி லிசா தெரிவிக்கையில் “விஷ் தனது வேலையை அளவுக்கதிகமாக நேசித்தார்: அவரைப் பொறுத்தவரை இது ஒரு வேலையை விட உயிர் என்றே சொல்லலாம்.

அவர் கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினரையும் அவர் தனது சொந்தமாகக் கருதினார். இறுதியா அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் விஷ்னா நன்றி கூறினார் என மனைவி லிசா தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு Worcestershire Royal Hospital இல் சிகிச்சை பெற்று வந்தார் விஷ்னா. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.