கம்பஹா, கோதம் பாடசாலைக்கு முன்பாக ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் நேற்று இரவு மோதுண்டு இந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது பகலகம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.