யாழில்..

யாழ்ப்பாணம் – ஏழாலையில் எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏழாலை, மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மித்த பகுதியிலிருந்து குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனக்குத் தானே எ ரியூட்டி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.




