கொரோனா நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு!!

567

கொரோனா வைரஸ்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை 505 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் மொத்தமாக 45 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்த் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 120 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 378 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.