க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!!

495

உயர்தர பரீட்சைகள்..

க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படாதென கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகளை பிற்போடுவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வரையில் 367000 உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.