இலங்கையில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு!!

614

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் நேற்று மட்டும் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் பதிவாக அதிக எண்ணிக்கையாகும்.

நேற்று முன்தினம் 63 கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்நிலையில், இரு நாட்களில் 128 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இது வரையில் 588 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 455 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 3,073,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 211,768 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.