யாழ் தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் வெள்ளை நாகபாம்பு ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு இளைஞர்களினால் ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வெள்ளை நாகபாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்றதை அவதானித்த உரிமையாளர் அயலவர்கள் உதவியுடன் பாம்பினைப் பிடித்து ஏழாலை பெரியதம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விட்டார்.
இந்த வெள்ளைப் நாகபாம்பினைப் பார்ப்பதற்காக அப்பகுதியினைச் சேர்ந்த பெருளமவான மக்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தனர்.