பளை மத்தியக்கல்லூரி மாணவனை காணவில்லை : பொலிஸார் விசாரணை!!

388

R.அனோச்..

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பகுதியை சேர்ந்த R.அனோச் எனும் மாணவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை. இது குறித்து கடந்த 28ம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பளை மத்திய கல்லூரியில் கடந்த வருடம் 2019 ஆண்டு சாதாரணதர கல்வி பரீடசை எழுதி முடிவுக்காக காத்திருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனுடைய பெற்றோர்கள் கடந்த ஒரு சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் தேடி பயன் எதுவும் இன்றி பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.