நீர் குழாயில் கை அசைவு முலம் கைகழுவும் முறையை கண்டுபிடித்த மாணவன்!!

274

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கைகளை பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் கைகளை சுத்தம் செய்யவும் புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தி தொடுகை மூலம் அல்லாமல் கை அசைவு முலம் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி இயக்கம் மூலம் இயக்கும் நீர் குழாயில் கைகழுவும் வசதிகள் கொண்ட தொழிநுட்ப கருவியை மாணவனொருவர் கண்டுபிடித்துள்ளார்.

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் கடந்த வருடம் 2019 உயர் தரபிரிவில் பொறியியல் தொழினுட்பத்தில் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழக நுழைவுக்கு காத்திருக்கும் எஸ்.அஷ்ஷாக் என்ற மாணவன் உருவாக்கியுள்ளார்.

இதனை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் பாடசாலை அதிபர்எம்.ஐ.ஜாபீர் முன்னிலையில் நேற்று அறிமுகம் செய்துள்ளார்.

அன்றாடம் நாம் நீர் குழாயினை தொடுகை மூலமே திறந்து கைகளினை கழுவி வருகின்றோம்.இதற்கு மாற்றமாக தொடுகை மூலம் அல்லாமல் தொழிநுட்ப முறையில் நீர் குழாயில் கையினை கழுவும் நுட்பமுறை கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளேன் .

இதனை இரு முறை மூலம் இயக்க முடியும் சென்சர் தொழிநுட்பத்தின் மூலம் அசைவினால்இயக்க முடியும் (0n/Off) மற்றையது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மூலம் குரல்பதிவை மேற்கொள்வதவன் ஊடாக இயக்க முடியும்.

(on/off) இதன் மூலம் எமதுசெயற்பாடுகளை தொடுகை இல்லாம் இலகுவாக மேற்க்கொள்ள முடியும் என்றும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.