மின்னல் தாக்கத்திற்கு குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

275

மின்னல்..

கிண்ணியா – கண்டல் காடு கிராமத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (01.05.2020) மாலை மின்னல் தாக்கத்தினால்உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா – காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.