கைகளைக் கழுவக் கூடியதான கால் அழுத்த சாதனம் : இலங்கை இளைஞனின் கண்டுபிடிப்பு!!

390

கை கழுவும் சாதனம்..

கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கைகளைக் கழுவிக் கொள்ளக் கூடியதான கால் அழுத்தத்துடன் இயங்கும் கை கழுவும் சாதனம் ஒன்றை கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

சாதாரணமாக காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனம் ஒன்றையே கண்டுபிடிப்பாளரரான AZ Tec ஐச் .எல்.எம் அஸீஸ் உருவாக்கி உள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் இவர் பல இயந்திரங்களை கண்டுபிடித்து சாதனைகள் படைத்தவர் என்பது குறிப்பிடதக்கது
கல்முனை பிரதேச செயலகத்துக்கு இந்த சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.

-மெட்ரோ நியூஸ்-