வவுனியா கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு கொரோனோ இல்லை!!

535

கொரோனோ..

வவுனியா கச்சகொடி பகுதியை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.

வவுனியா மகாகச்சகொடியை சேர்ந்த குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என 9 பேர் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த 9 பேருக்குமான பிசிஆர் பரிசோதனைகளிற்கான மாதிரிகள் சேர்க்கும் பணி நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. அதற்கான முடிவுகள் நேற்றையதினம் வெளிவந்திருந்தது.

அதனடிப்படையில் கடற்படை உத்தியோகத்தரின் குடும்ப உறவினர்களான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்று பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், ஒருவரின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும்தெரிவித்தார்.