தென் கொரிய பெண்ணொருவர் தனது அபரிமித சாப்பாட்டு திறமையால் மாதம் 5600 பவுண்ட் ஊதியம் பெறுகிறார்.
இந்தப் பெண்ணின் பெயர் பார்க் சியோசின். தென்கொரியா தலைநகர் சியோலில் வசிக்கிறார். இந்த சாப்பாட்டு ராணி உணவை பிரபலப்படுத்தும் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரது வேலை தனது வீட்டில் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் உணவு வகைகளை எடுத்து ருசித்து சாப்பிட வேண்டும்.
அந்த காட்சியை படம் பிடித்து நேரடியாக இணையதளத்தில் காட்டுகிறார்கள். தினமும் 3 மணி நேரம் இது படம் பிடிக்கப்படும். இதை பல லட்சம் பேர் கண்டுகளிக்கிறார்கள்.