இலங்கை வந்த விமானம்..
இலங்கைக்கு வர முடியாமல் பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் சிக்கியிருந்த 207 இலங்கை மாணவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
207 மாணவர்களுடன் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத்தந்துள்ளது.
லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 504 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இந்த மாணவர்கள் மற்றும் அவரது பொதிகளுக்கு 4ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தினால் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னர் பேருந்தில் ஏற்றப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.