கொரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 266 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் புதிதாக 2,573 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.





