மன்னாரில்..
மன்னார் – எமில் நகர் கிராம சேவகர் பிரிவிற்கு உற்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில்உள்ள வீடொன்று இன்று முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
திடீரென தீப்பற்றியமையால் குறித்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன்,கற்கல் அடுக்கப்பட்டு ஓலையால் மேயப்பட்ட வீடு என்பதால் வீடு முழுவதும் வேகமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அயலவர்கள் மற்றும் நகர சபையின் தண்ணீர் பவுசரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதும் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
கிராம சேவகர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலைமை தொடர்பான விடயங்களை பார்வையிட்டுள்ளனர். இக்குடும்பத்துக்கு உதவ விருப்புபவர்கள் 0772658949 தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியும்.